என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசியல் தலைவர்கள்"

    • அரசியலில் நிரந்தர நண்பனும், எதிரியும் இல்லை என்ற பழமொழிக்கு ஏற்ப ஒரு கட்சியில் இருந்து மற்ற கட்சிக்கு தாவும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது.
    • சில நாட்களுக்கு முன் தமிழக வெற்றிக்கழகத்தில் நாஞ்சில் சம்பம் இணைந்து கொண்டார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டசபைக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. எப்போதும் போல் இல்லாமல் இத்தேர்தலுக்காக கிட்டத்தட்ட 6 மாதத்திற்கு முன்னதாகவே 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்', 'உள்ளம் தேடி- இல்லம் நாடி', 'தமிழக மக்கள் உரிமை மீட்பு', 'மக்கள் சந்திப்பு', என பல பெயர்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியலில் நிரந்தர நண்பனும், எதிரியும் இல்லை என்ற பழமொழிக்கு ஏற்ப ஒரு கட்சியில் இருந்து மற்ற கட்சிக்கு தாவும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில், இதுவரை தாய் கழகம் என்று சொல்லிக்கொண்டு மற்றக் கட்சிக்கு தாவிய முக்கிய அரசியல் தலைவர்கள் குறித்து பார்ப்போம்...

    சி.டி.ஆர்.நிர்மல்குமார்

    இந்த ஆண்டின் தொடக்கத்தில் அ.தி.மு.க.வில் இருந்து விலகிய சி.டி.ஆர்.நிர்மல்குமார் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார். பா.ஜ.க.வில் இருந்து அ.தி.மு.க.வுக்கு சென்ற சி.டி.ஆர்.நிர்மல்குமார் அங்கு ஐ.டி.விங்க் நிர்வாகியாக பணியாற்றி வந்தார். இதனை தொடர்ந்து அ.தி.மு.க.வில் இருந்து விலகி தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார். அவருக்கு இணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

    மைத்ரேயன்

    பா.ஜ.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்து மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தவர் மைத்ரேயன். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிருப்தியில் இருந்து வந்த மைத்ரேயன் தி.மு.க.வில் இணைந்தார். தி.மு.க.வில் இணைந்த உடனே அவருக்கு பதவியும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    மருது அழகுராஜ்

    அ.தி.மு.க.வின் பிரசார பீரங்கிகளில் ஒருவராக பார்க்கப்பட்ட மருது அழகுராஜ், ஜெயலலிதா இருந்த போது நமது எம்.ஜி.ஆர், அதன்பிறகு நமது அம்மா கட்சி ஆகிய நாளிதழ்களின் ஆசிரியராக பணியாற்றியவர். அதன்பின் அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் சென்றபோது அவருக்கு ஆதரவாக இருந்தவர் திடீரென தி.மு.க.வில் இணைந்தார்.



    அன்வர் ராஜா

    ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. உடைந்து ஓ.பி.எஸ் அணி – இ.பி.எஸ் அணி என்று பிரிந்தபோது இ.பி.எஸ் அணியில் இருந்தவர் அன்வர் ராஜா. ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இருவரும் இணைந்த பின்னர் சசிகலாவை கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தலைமைக்கு எதிராக பேசி வந்தார். இதனால் 2021-ம் ஆண்டு அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், தி.மு.க.வில் இணையப்போவதாக அப்போது செய்திகள் வந்தாலும், வேறு கட்சியில் சேராமல் அ.தி.மு.க. சார்பாகவே இருந்ததால் அவரை மீண்டும் 2023-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி.

    இதனிடையே, 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மீண்டும் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்ததால் அதிருப்தி அடைந்த அன்வர் ராஜா, "தமிழ்நாட்டில் காலூன்ற துடிப்பது பா.ஜ.க.வின் எண்ணமாக இருந்தாலும் அது ஒரு போதும் நடக்காது'' என்று கடுமையாக விமர்சித்து கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தினார். இதனை தொடர்ந்து அ.தி.மு.க.வில் இருந்து விலகி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.

    மனோஜ் பாண்டியன்

    ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் பி.ஹெச். மனோஜ் பாண்டியன். அ.தி.மு.க.வின் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர்களில் ஒருவரான மனோஜ் பாண்டியன் வழக்கறிஞரும் கூட. அ.தி.மு.க. இரண்டாக பிரிந்தபோது ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்த மனோஜ் பாண்டியன் தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார். தி.மு.க.வில் சேர்வதற்கு முன்னதாக தனது பதவியை அவர் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

    செங்கோட்டையன்

    எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து அ.தி.மு.க.வில் பணியாற்றி வந்தவர் செங்கோட்டையன். 50 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் அ.தி.மு.க.வில் பயணித்து ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்தவர். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு, செங்கோட்டையனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து ஓரங்கப்பட்ட செங்கோட்டையன், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதால் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் செங்கோட்டையன், தி.மு.க.வில் இணைவார் என்று கூறப்பட்ட நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்த மறுநாளே தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார். அவருக்கு த.வெ.க. நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அ.தி.மு.க.வில் இருந்து பலர் விலகுவார்கள் என செங்கோட்டையன் கூறியுள்ளார் என்பது குறிப்பிட்டதக்கது.



    நாஞ்சில் சம்பத்

    அரசியல் பிரசார பீரங்கியாக செயல்பட்டவர் நாஞ்சில் சம்பத். வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.ம.மு.க.வில் இணைந்தாலும் தி.மு.க. ஆதரவாளராகவே மேடைகளில் பேசிவந்தார் நாஞ்சில் சம்பத். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் தமிழக வெற்றிக்கழகத்தில் நாஞ்சில் சம்பம் இணைந்து கொண்டார்.

    தமிழக சட்டசபைக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் தற்போது வரை தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, த.வெ.க., என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. இந்த எண்ணிக்கையானது குறைவதும், உயர்வதும் பொறுத்து ஒரு கட்சியில் இருந்து மற்ற கட்சிக்கு மாறும் தலைவர்களின் எண்ணிக்கையும் கூடும். இதற்கு காலம் தான் பதில் சொல்லும்... பொறுத்திருந்து பார்ப்போம்... 

    • இந்துக்களின் வாழ்வியல் முறைக்கு பிரச்சனை.
    • மொழியும், ஆன்மீகமும், இலக்கியமும் சேர்ந்ததுதான் தமிழ்.

    மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-

    இந்தியாவில் ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டதால் சிலருக்கு பிரச்னை. நமது வாழ்வியல் முறையை தொந்தரவு செய்து பஹல்காமில் தாக்குதல் நடத்தப்பட்டது.

    எனது வாழ்வியல் முறைக்கு பிரச்னை வந்தால் எழுந்து நிற்பேன்; அடிப்பேன். இந்து என்பதற்காக நமது கடைகோடி தொண்டர்கள் கொல்லப்படுகிறார்கள்.

    மொழியும், ஆன்மீகமும், இலக்கியமும் ஒன்றாக இருக்கும் பெருமை தமிழுக்கு உண்டு; கந்த சஷ்டி கவசத்தில் அறிவியல், விஞ்ஞானம் உள்ளது.

    5,400 ஆண்டுகள் பழமையானவன் தமிழன். அந்த பழமையோடு வாழ விடுவார்களா? செல்பி கேட்டால் ஒரு அரசியல் தலைவர் திருநீறை அழிக்கிறார்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர் சந்திப்பு.
    • ரூ.50 ஆயிரம் பணம் மட்டுமே கையில் எடுத்துச் செல்லலாம்.

    2024ம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கி, ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

    இதற்கிடையே, தமிழ்நாட்டில் முதற்கட்டமாக ஒரே கட்டத்தில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலும் அன்றே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும்.

    தமிழகத்தில் விளவங்கோடு தொகுதிக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    பொன்முடி, சட்டமன்ற உறுப்பினராக தொடர்வதால், திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் கிடையாது.

    வாக்களர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்புள்ளது. வயதானவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம். 12டி விண்ணப்பத்தை பயன்படுத்த வேண்டும்.

    இப்தார் நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள் பங்கேற்கலாம். ஆனால், வாக்கு சேகரிக்க கூடாது.

    தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. அதனால், ரூ.50 ஆயிரம் பணம் மட்டுமே கையில் எடுத்துச் செல்லலாம்.

    அரசாணை எதுவும் இனிமேல் வெளியிட கூடாது.

    பொன்முடி பதவி ஏற்பு தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசியல்வாதிகளுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்.
    • ருசிகரமான அந்த கணிப்பு உங்களுக்காக

    இன்று மலர்ந்துள்ள 2025-ம் ஆண்டு அதிக மகிழ்ச்சியும், இன்பமும் தர வேண்டும் என்பதுதான் ஒவ்வொருவரின் எதிர் பார்ப்பு. அரசியல்வாதிகளுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்று பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று அவர்களது ஜாதகத்தை அலசி ஆராய்ந்து ஜோதிட ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது.


    ஒவ்வொரு அரசியல் தலைவருக்கும் 2025-ல் எத்தகைய பலன் கிடைக்கும் என்று அதில் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. ருசிகரமான அந்த கணிப்பு வருமாறு:-


    பிரதமர் மோடி

    பிரதமர் மோடிக்கு குருபகவான் 7-வது வீட்டில் இருக்கிறார். இதனால் அவர் அனைத்து துறைகளிலும் எடுக்கும் திட்டங்களும், முடிவுகளும் வெற்றிகளுடன் மேம்பாட்டை பெறும். மே மாதம் 29-ந்தேதி வரை அவருக்கு செவ்வாய், சனி தசாபுத்தி இருப்பதால் திடீர் சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.

    என்றாலும் வருகிற மே மாதம் முதல் அவரது ஜாதகத்தில் புதன் திசை மிகவும் அனுகூலமாக இருக்கிறது. இது அவருக்கு கட்சியிலும், ஆட்சியிலும் அதிக ஆதரவை பெற்று தந்து நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல உதவியாக இருக்கும்.

    சனிப்பெயர்ச்சி அவருக்கு சிறப்பாக இருப்பதால் நாட்டின் நிதி மேம்பாட்டிலும் சர்வதேச அளவில் அவர் எடுக்கும் முயற்சிகளிலும் அபரிமிதமான வெற்றிகளை கொடுக்கும்.


    அமித்ஷா

    மத்திய மந்திரி அமித்ஷா ஜாதகத்தில் சனி 12-வது இடத்துக்கு செல்கிறார். அவரது அதிரடி நடவடிக்கை கள் நாட்டுக்கு நலன் பயப்பதாக இருக்கும். ஆனால் குரு பகவான் 3-வது வீட்டில் இருப்பதால் அவருக்கு ஆதரவாளர்கள் மூலம் திடீர் நெருக்கடியும், கோபமும் ஏற்படலாம்.

    சனியும், குரு பகவானும் சரியான நிலையில் இல்லை. எனவே உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.


    ராகுல்காந்தி

    ராகுல் ஜாதகத்தில் சனி 4-வது இடத்தில் இருக்கிறார். ராகு பகவான் 9-வது வீட்டில் அமர்ந்துள்ளார். அதோடு தற்போது அவருக்கு ராகு திசையும் நடக்கிறது. இதனால் அவருக்கு எதிர்பாராத சவால்கள் வரக்கூடும்.

    மே 14-ந்தேதிக்கு பிறகு அவருக்கு சில கிரக மாற் றங்கள் ஏற்படுகிறது. இத னால் தோழமை கட்சிகளின் ஆதரவும், நட்பும் மேம்படும். ஆனால் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும் என்ற நிலையில் அவரது கிரக மாற்றங்கள் இருக்கின்றன.


    பிரியங்கா

    பிரியங்காவின் ஜாத கத்தில் வெள்ளி திசை நடக்கிறது. இதனால் அவரது முயற்சிகளில் திருப்தியும், வெற்றியும் உண்டாகும். மே 14-ந்தேதிக்கு பிறகு அவ ருக்கு அரசியலில் தனிப்பட்ட முறையில் பல்வேறு சவால் கள் எழுவதற்கு வாய்ப்பு உள்ளது. முக்கிய முடிவுகள் எடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.


    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தற்போது குரு பகவான் 11-வது இடத்தில் இருக்கிறார். இது அவருக்கும், அவர் எடுக்கும் முடிவுகளுக்கும் மிகவும் சாதகமான பலன்கள் பெறும். குறிப்பாக இந்த காலத்தில் அவர் எடுக்கும் முடிவுகள் தமிழ்நாட்டுக்கு மேலும் நன்மைகள் தருவதாக அமையும்.

    என்றாலும் சனி பகவான் 8-வது இடம் மீன ராசிக்கு செல்வதால் உணவு வகைகளில் கவனமாக இருக்க வேண்டும். மற்றபடி அவரது தசாபுத்திகள் அனைத்தும் சிறப்பாக உள்ளன. இதன் காரணமாக அவர் எடுக்கும் முடிவுகள் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மறு மலர்ச்சி உண்டாக்கும் வகையில் அமையும்.


    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ஜாத கத்தில் தற்போது கிரக அமைப்புகள் அனைத்தும் மிக மிக சிறப்பாக அமைந்துள்ளன. இதன் காரணமாக இந்த ஆண்டு அரசியலிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர் மேற்கொள்ளப் போகும் பயணங்களுக்கு மிகப்பெரிய வெற்றியும் சாதனைகளும் காத்து இருக்கிறது.

    சனி திசை உதயநிதி ஸ்டாலின் எடுக்கும் முடிவுகளுக்கு உரிய வெற்றிகளை தரும். சுக்கிர பகவானின் அமைப்பும் அவருக்கு மிகவும் அமோகமாக இருக்கிறது. இது அவருக்கு அரசியலில் கூடுதல் அங்கீகாரத்தை பெற்றுக் கொடுக்கும்.

    குரு பகவான் அடுத்து மிதுன ராசிக்கு செல்ல இருப்பதும் அவருக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்த கால கட்டத்தில் அவர் எடுக்கும் அதிரடி முடிவுகள் அனைத்து துறைகளிலும் நன்மையையும், திருப்தியையும் கொடுக்கும்.


    எடப்பாடி பழனிசாமி

    அ.தி.மு.க. பொதுச் செய லாளர் எடப்பாடி பழனி சாமி ஜாதகப்படி 2025-ம் ஆண்டு தொடக்கத்தில் குரு பகவான் 11-வது இடத்தில் இருக்கிறார். இது அவருக்கும், அ.தி.மு.க.வுக்கும் சவால்களையும், சாதனைகளையும் சம அளவில் பெற்றுத் தருவதாக இருக்கும்.

    சனி பகவான் 8-வது வீட்டுக்கு செல்வதால் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். அது போல உள் கட்சி விவகாரங்களிலும் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

    குரு பகவான் 4-வது வீட்டுக்கு செல்லும் போது பல புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். குறிப்பாக அவரது தலைமையிலான அ.தி.மு.க.வில் பல புதிய அம்சங்களுடன் ஒற்றுமைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

    சனி பகவான் மீன ராசிக்கு செல்லும்போது அரசியலில் அவர் எடுக்கும் முடிவுகள் ஆதாயத்தை கொடுக்கும். என்றாலும் அரசியல் முடிவுகள் எடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.


    விஜய்

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஜாதகப்படி சனி பகவான் 8-வது வீட்டில் இருக்கிறது. இது அவரது அரசியல் பயணத்தை நேர்த்தியாக வைத்திருக்க உதவும்.

    குரு பகவான் 12-வது வீட்டுக்கு மிதுன ராசிக்கு செல்வதால் விஜய் தனது அரசியல் பயணத்தில் சற்று கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டியது இருக்கும். எதிர்பாராத நெருக்கடிகளை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது.

    தமிழகம் முழுவதும் இந்த கால கட்டத்தில் பிரசாரத்தை தொடங்கலாம். விஜய் ஜாதகப்படி சந்திரனின் அமைப்பு மிக மிக சாதகமாக இருக்கிறது. இது அவரது தமிழக வெற்றிக் கழக கட்சியை 2025-ல் மிகவும் வெற்றிகரமான வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.


    அண்ணாமலை

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஜாதகப்படி குரு பகவான் 11-வது வீட்டில் இருக்கிறார். சனி பகவான் 9-வது வீட்டுக்கு செல்கிறார். இது அவருக்கு அரசியலில் அங்கீகாரத்தை பெற்றுத் தரும்.

    சுக்கிர திசை இருப்பதாலும் புதன் தசை அனுகூலமாக இருப்பதாலும் கட்சியை அவர் கட்டுப்கோப்புடன் வைத்து இருப்பார். சில முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு இந்த கால கட்டங்கள் அவருக்கு சாதகமாக உள்ளன.


    கனிமொழி

    கனிமொழி எம்.பி.க்கு ஜென்ம சனி கால கட்டம் இது. மார்ச் மாதத்துக்கு பிறகு அவரது ஜாதக அமைப்பில் மாற்றம் ஏற்படும். அது அவரது கட்சி பணிகளை மேன்மைப் படுத்தும்.

    குரு பகவானின் மாற்றம் வரும்போது அவருக்கு அரசியலிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிக முக்கிய திருப்பங்கள் ஏற்படும். மக்கள் மத்தியில் அவருக்கு கூடுதல் அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.


    சசிகலா

    சசிகலா ஜாதகப்படி சனி 12-வது இடத்திலும், குரு பகவான் 3-வது இடத்திலும் இருக்கிறார்கள். இது அவ ருக்கு தொடர்ந்து நெருக்கடி களையும், சவால்களையும் கொடுத்து கொண்டே இருக் கும். இதனால் இந்த கால கட்டத்தில் மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    குரு பகவான் 4-வது இடத்துக்கு செல்லும் போது அவருக்கு சாதகமான சூழ்நிலை அமையும். அ.தி.மு.க.வை ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்ற அவரது முயற்சிக்கு வெற்றி கிடைக்கலாம். 

    ×